• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளால் இணைப்பட்டுள்ளன – பிரதமர் மோடி!

இந்தியாவும் இலங்கையும் ஆழமான நாகரிகப் பிணைப்புகளால் இணைப்பட்டுள்ளன – பிரதமர் மோடி!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2026/02/05
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

கொழும்பில் புத்தரின் புனித தேவ்னிமோரி நினைவுச்சின்னங்களின் கண்காட்சியைத் தொடங்கி வைத்ததற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

இது குறித்து எக்ஸில் இன்று மேலும் பதவிட்டுள்ள இந்தியப் பிரதமர், 

கொழும்பிலுள்ள புனித கங்காராமை விகாரையில் புனித தேவ்னிமோரி சின்னங்களின் தரிசனத்தை ஆரம்பித்துவைத்தமைக்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு நன்றி. 

2025 ஏப்ரலில் எனது விஜயத்தின்போது இச்சின்னங்களை இலங்கைக்கு அனுப்புவது குறித்து தீர்மானிக்கப்பட்டதுடன் அதன் அடிப்படையில் மக்கள் வழிபாட்டினை மேற்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. 

நமது நாடுகள் ஆழமான நாகரீக மற்றும் ஆன்மீக பிணைப்புகளினால் இணைக்கப்பட்டுள்ளன. 

புத்த பெருமானின் கருணை, அமைதி மற்றும் நல்லிணக்கம் குறித்த காலத்தால் அழியாத செய்தியானது தொடர்ந்து மனித குலத்துக்கு வழிகாட்டட்டும் – என்றார்.

குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் உள்ள தேவ்னிமோரி தொல்பொருள் தளத்திலிருந்து உருவான இந்தப் புனித நினைவுச்சின்னங்களின் முதல் சர்வதேச கண்காட்சி இன்று ஹுணுபிட்டி, கங்காராமை விசாரையில் ஆரம்பமானது.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனத்தின் ஆரம்ப நிகழ்வைக் குறிக்கும் வகையில் புத்த பெருமானின் புனித சின்னங்களுக்கு நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதல் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தின் அரவல்லி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தேவ்னி மோரி தொல்பொருள் தளத்தில் உள்ள புத்த மடாலய வளாகத்தில் உள்ள ஸ்தூபியின் அருகே 1960களில் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது இந்த புனிதச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த இடத்தில் இரண்டு புனிதச் சின்ன கலசங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அவற்றில் ஒன்றில் இந்த புத்த பெருமானின் புனித சின்னங்கள் கிடைத்தன. 

அங்கு காணப்பட்ட கலசத்தில் உள்ள கல்வெட்டு, “புத்த பெருமானின் புனிதச் சின்னங்கள் வைக்கப்பட்ட இடம்” என்று எழுதப்பட்டிருந்தமை, இவற்றின் புனிதத்தை மேலும் உறுதிப்படுத்தும் வலுவான சான்றாகும்.

இந்தியாவின் பரோதா அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்தப் புனிதச் சின்னங்கள், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், இலங்கை மக்கள் இந்த புனிதச் சின்னங்களை தங்கள் கண்களால் பார்த்து வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

Related

Tags: anura kumara dissanayakeDevnimoriNarendra Modiதேவ்னிமோரிநரேந்திர மோடி
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மைதான பராமரிப்பாளர் மீதான வெறுப்பே கொலைக்கு காரணமென குற்றம் சாட்டப்பட்ட காவலாளி ஒப்புதல்!

Next Post

லெஸ்டர் (Leicester) நகரில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் குத்திக்கொலை: ஒருவர் கைது!

Related Posts

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!
இலங்கை

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

2026-09-19
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!
இலங்கை

யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

2026-09-19
ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கை

ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2026-09-19
அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்!
இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் ஆசனப்பட்டி கட்டாயம்!

2026-09-19
இன்றும் பல பகுதிகளில் மழைக்கான சாத்தியம்!
இலங்கை

இன்று முதல் மழை நிலைமை மேலும் அதிகரிக்கும்!

2026-09-19
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!
இலங்கை

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள்!

2026-09-18
Next Post
லெஸ்டர் (Leicester) நகரில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் குத்திக்கொலை: ஒருவர் கைது!

லெஸ்டர் (Leicester) நகரில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே மாணவர் குத்திக்கொலை: ஒருவர் கைது!

கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்!

கடற்தொழில் நீரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கரைவலை மீன்பிடி மீனவர்கள் போராட்டம்!

கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மைல்கல்!

கடந்த ஆண்டில் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மைல்கல்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

0
ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

0
ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!

ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!

0
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

0
ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

வாகனப் பதிவுப் பிரச்சினைகளுக்கு வட்ஸ்அப் மூலம் தீர்வு!

2026-09-19
ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷனின் சிக்மா பட டிரைலர்

2026-09-19
ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!

ரஷ்ய எரிபொருள் பயன்பாட்டிற்கு 100% வரி: ட்ரம்பிற்கு அதிகாரம் அளிக்கும் புதிய சட்டமூலம்!

2026-09-19
யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

யாழில் இரண்டு கடல் ஆமைகளுடன் நபர் ஒருவர் கைது!

2026-09-19
ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ரயில் வேலைநிறுத்தம் நிறைவடைந்தாலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2026-09-19
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.