இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெடிப்பு நடந்த இடத்திலிருந்து மொத்தம் 18 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் பொலிஸார் வியாழக்கிழமை (05) ஒரு அறிக்கையில் உறுதிபடுத்தினர்.
அனர்த்தத்தில் மேலும் எட்டு பேர் காயமடைந்ததாக வெடிப்பு நடந்த கிழக்கு ஜெயின்டியா ஹில்ஸ் மாவட்டத்தின் உயர் அதிகாரி மணீஷ் குமார் தெரிவித்தார்.
வெடிப்பு நடந்த நேரத்தில் சுரங்கத்திற்குள் இருந்த தொழிலாளர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
இதனால் மேலும் பலர் சுருங்கத்தில் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சம்பவம் டைனமைட் வெடிப்பால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் தடயவியல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.














