நேட்டோவின் வட துருவப் பகுதி தொடர்பான இராணுவ கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு டென்மார்க் நான்கு F-35 போர் விமானங்களை வழங்கும் என்று டென்மார்க் பாதுகாப்பு அமைச்சர் ட்ரோல்ஸ் லுண்ட் பவுல்சன் இன்று தெரிவித்தார்.
எங்களது F-35 பங்களிப்பு பிராந்தியத்தில் ஒட்டுமொத்த இருப்பை வலுப்படுத்துகிறது மற்றும் ஆர்க்டிக் மற்றும் வடக்கு அட்லாண்டிக்கில் ஒரு தீவிர நட்பு நாடாக டென்மார்க்கின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று பால்சன் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.
ஜெர்மனியின் மியூனிக் பாதுகாப்பு உச்சி மாநாட்டிற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசும் போதே இந்த விடயத்தை அவர் கூறினார்.
இதனிடையே, டென்மார்க்கிலிருந்து கிரீன்லாந்தை கையகப்படுத்த அமெரிக்க ஜனாதிபதியின் முயற்சியால் தூண்டப்பட்ட கூட்டணிக்குள் உள்ள பதட்டங்களைத் தணிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஆர்க்டிக்கில் தனது இருப்பை வலுப்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளதாக நேட்டோ புதன்கிழமை தெரிவித்து உள்ளது.



















