சாத்தியமான விநியோக நெருக்கடிக்குத் தயாராகும் வகையில், இங்கிலாந்து அரசாங்கம் அவசரகால பெற்றோல் மற்றும் டீசல் பங்கீட்டுத் திட்டங்களை மீள்பரிசீலனை செய்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டங்களில், எரிபொருள் கொள்வனவுக்கான வரம்பு 30 பவுண்ட்ஸ்ஸாகவும், தேசிய சுகாதார சேவை மற்றும் காவல்துறை போன்ற அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.
மத்திய கிழக்கில் மோதல் தொடர்வதால், எரிபொருள் பங்கீட்டு முறை குறித்த அச்சம் அதிகரித்துள்ளது.
உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் முக்கியமான ஹோர்முஸ் நீரிணை விநியோகப் பாதையை ஈரான் தடுத்துள்ளதுடன், நடைபெற்று வரும் மோதலுக்கு மத்தியில் அப்பிராந்தியம் முழுவதும் உள்ள எரிசக்தி உள்கட்டமைப்புகள் குறிவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மக்கள் அதிகளவில் எரிபொருள் வாங்கி சேமித்து வைத்திருப்பதை தடுக்கும் நோக்கிலும், அனைவருக்கும் எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்யவும் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக அதிகபட்ச விலை வரம்பு 30 பவுண்ட்ஸ்களாக விதிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.
2021 ஆம் ஆண்டு எரிபொருள் பற்றாக்குறையின் போது, அதிகமான சாரதிகள் எரிபொருளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக இதுபோன்ற விலை வரம்புகள் அமுல்படுத்தப்பட்டிருந்தன.
















