ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கரைவலை மீனவர்கள் அந்த இடத்திலிருந்து விலக தீர்மானித்துள்ளனர்.
இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்திய கலந்துரையாடலைத் தொடர்ந்தே அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.














