புத்தளம் ரயில் மார்க்கத்தில் புத்தளம் ரயில் நிலையம் வரையிலான ரயில் சேவைகள் நாளை (16) மீண்டும் ஆரம்பமாகும் என ரயில் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி புத்தளம் ரயில் மார்க்கம் நாளை முழுமையாக திறக்கப்படும் எனவும், கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் வரை ரயில்கள் இயக்கப்படும் எனவும் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.














