யட்டியாந்தோட்டைபொலிஸ் பிரிவுக்குட்பட்ட தணகொலவத்த பகுதியில், தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (20) மாலை 4.00 மணியளவில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று குறித்த வீதியால் பயணித்துக்கொண்டிருந்த போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்போது அந்தப் பகுதியில் நிலவும் கடும் மழை காரணமாக வீதி வழுக்கக்கூடிய நிலையில் காணப்படுவதால் இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
காலநிலை மாற்றங்களால் வாகனங்களை கவனமாக செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.












