இங்கிலாந்தின் கிழக்கு சசெக்ஸ் பகுதியில் உள்ள குரோபரோ (Crowborough) நகரத்தில் புகலிடம் தேடுவோரைத் தங்கவைக்கும் அரசின் முடிவால் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து சட்டப் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.
இதேவேளை, முன்னாள் ராணுவப் பயிற்சி மையத்தில் நூற்றுக்கணக்கான ஆண்களைக் குடியமர்த்துவது உள்ளூர் பாதுகாப்பை பாதிக்கும் என்று அச்சப்படும் மக்கள், ‘குரோபரோ ஷீல்ட்’ (Crowborough Shield) என்ற அமைப்பின் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
முறையான ஆலோசனையின்றி எடுக்கப்பட்ட இந்த முடிவால் சமூக அமைதி சீர்குலையும் என்று குடியிருப்பாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் , விலையுயர்ந்த விடுதி செலவுகளைக் குறைக்க இத்தகைய பெரிய அளவிலான தங்குமிடங்கள் அவசியம் என்று அரசாங்கம் வாதிடுகிறது.
நகராட்சி மற்றும் பொதுமக்கள் என இருதரப்பும் வரிப்பணத்தை செலவிட்டு அரசாங்கத்துடன் சட்ட ரீதியாகப் போராடும் ஒரு சிக்கலான சூழலை எதிர்கொண்டுள்ளன.
இதேவேளை, இந்த வழக்கின் தீர்ப்பு நாடு முழுவதும் உள்ள இது போன்ற பிற திட்டங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, சட்டவிரோத குடியேறிகளை இங்கிலாந்துக்கு ஈர்க்கும் காரணிகளை நீக்கி வருவதாக அரசாங்கம் கூறிவரும் நிலையில் இது ஐக்கிய ராஜ்யத்தின் புகலிட அமைப்பில் மேற்கொள்ளப்படும் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும்.
இந்நிலையில் நாளைய தினம் , இது குறித்து நீதித்துறை மறுஆய்வு நடத்தப்பட வேண்டுமா என்பதை உயர் நீதிமன்றம் முடிவு செய்யும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆலோசனை மற்றும் வெளிப்படைத்தன்மையில் ஏற்பட்ட தோல்விகள் உள்ளிட்ட முடிவெடுக்கும் செயல்முறையின் சட்டபூர்வமான தன்மையில் இந்த வழக்கு கவனம் செலுத்துகிறது.
மேலும் தற்போது நடைபெற்று வரும் சட்ட நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கது.
















