இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான உயர்மட்ட சந்திப்புகளுக்காக தெற்கு-மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க சிறப்புத் தூதர் செர்ஜியோ கோர் (Sergio Gor) மார்ச் 19 முதல் 24 வரை இலங்கை மற்றும் மாலைத்தீவிற்குப் பயணம் மேற்கொள்வார்.
இலங்கையில் இருக்கும்போது, சிறப்புத் தூதர் கோர், அமெரிக்க-இலங்கை உறவின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தவும், முக்கியத் துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் மூத்த தலைவர்களைச் சந்திப்பார் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.
சிறப்புத் தூதர் கோரின் சந்திப்புகள், முக்கிய கடல்வழிப் பாதைகளைப் பாதுகாப்பதற்கும் துறைமுகங்களை உறுதி செய்வதற்கும், பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக மற்றும் வணிக உறவுகளை வலுப்படுத்துவதற்கும், நமது இரு நாட்டு மக்களின் நலனுக்காக ஒரு சுதந்திரமான, திறந்த மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பகுதியை மேம்படுத்துவதற்கும் அமெரிக்கா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு மேலும் ஆதரவளிக்கும்.
மலைத்தீவுக்கான பயணத்தில், சிறப்புத் தூதர் கோர், இருதரப்பு உறவுகளுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்கும், பாதுகாப்பு ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்வதற்கும், மாலைத்தீவின் முக்கிய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் அதன் பொருளாதாரத்தை விரிவுபடுத்துவதற்குமான முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும், அத்துடன் 60 ஆண்டுகால தூதரக உறவுகளை நினைவுகூருவதற்கும் மூத்த அரசாங்க அதிகாரிகளைச் சந்திப்பார்.













