ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரினால் ஏற்பட்ட எரிசக்தி விலை அதிர்ச்சியை விரைவாகத் தணிக்கும் ஒரு வழியா ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மின்சார மீதான வரிகளைக் குறைத்து, விலைகளுக்கு மானியம் வழங்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைக்கும் என்று அதன் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் (Ursula von der Leyen) தெரிவித்தார்.
இது தொடர்பில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,
சில சமயங்களில், எரிவாயுவை விட மின்சாரத்திற்கு 15 மடங்கு வரை அதிக வரி விதிக்கப்படுகிறது. இது இவ்வாறு இருக்கக்கூடாது.
மின்சாரத்திற்கான வரி விகிதங்களைக் குறைக்கவும், புதைபடிவ எரிபொருட்களை விட மின்சாரத்திற்குக் குறைந்த வரி விதிக்கப்படுவதை உறுதி செய்யவும் நாங்கள் முன்மொழிவோம்.
உறுப்பு நாடுகள் ஏற்கனவே எரிசக்தி ஆதாரத்தின் விலை உயர்வுகளை ஈடுசெய்ய அரசு உதவி நடவடிக்கைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் நாங்கள் அரசு உதவியை மேலும் நெகிழ்வுத்தன்மையுடன் மாற்றுவோம் – என்றும் கூறினார்.
















