• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
யாழ். வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் போராட்டம்!

வட்டுக்கோட்டையில் ஆம்புலன்ஸ் இல்லாத காரணத்தால் உயிரிழந்த நோயாளி – சட்டத்தரணி அதிர்ச்சி தகவல்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/22
in இலங்கை, பிரதான செய்திகள், யாழ்ப்பாணம், வட மாகாணம்
68 0
A A
0
29
SHARES
976
VIEWS
Share on FacebookShare on Twitter

நோயாளி ஒருவரை யாழ். போதனைக்கு கொண்டு செல்வதற்கு நோயாளர் காவு வண்டி இல்லாத காரணத்தால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் இடம்பெற்றதாக சட்டத்தரணி எம்.தாட்சாயினி தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

வட்டுக்கோட்டை பகுதியில் விபத்து ஒன்று இடம்பெற்றது. அந்த விபத்தில் காயமடைந்தவரை வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கே சிகிச்சையளிக்க கூடிய வசதி இருக்கவில்லை. அத்துடன் குறித்த நோயாளியை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டியும் இல்லை.

இதேவேளை அவரை சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அங்கும் நோயாளர் காவு வண்டி இருக்கவில்லை. இதனால் குறித்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

எமது வைத்தியசாலையில் பெரிய பெரிய கட்டடங்கள் இருந்தாலும் 24 மணிநேர மருத்துவ சேவையோ அல்லது அடிப்படை சுகாதார வசதிகளை பெறக்கூடிய வசதிகளோ இல்லை.

கிளினிக் வசதி இருந்தாலும், இரண்டு வைத்தியர்களே கடமையில் இருப்பதால் மக்கள் பி.ப 5.00 மணிவரை காத்திருந்து சேவையை பெறவேண்டிய தேவை உள்ளது. தாதியர் இருந்தால்கூட சில சேவைகளை பெற முடியும். ஆனால் இந்த வைத்தியசாலைக்கு ஒரு தாதியர் கூட இல்லை.

நாய் கடிக்கு இலக்கானவர்கள் முதலாவது ஊசியை வைத்தியசாலையில் பெற்றுவிட்டு அடுத்த ஊசிக்காக வரும்போது சங்கானை அல்லது காரைநகர் வைத்தியசாலைக்கு செல்லுமாறு கூறுகின்றனர். சாதாரணமாக ஒரு ஊசியை போடுவதற்கு வந்தால் கூட அந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

இரவு வேளையில் வைத்தியசாலைக்கு வந்தால் வைத்தியர் இல்லாத காரணத்தால் ஆம்புலன்ஸ் தர முடியாது என்று சொல்கிறார்கள். பி.ப 6.00 மணிக்கு பின்னர் வைத்தியசாலை பூட்டப்பட்டிருக்கும். அவசிய சுகாதார சேவைகளை பெறுவதற்கு வரும்போது வைத்தியசாலை பூட்டப்பட்டு இருப்பது அதிர்ச்சியளிக்ககூடிய விடயம். ஆகவே எமது மக்களின் நலனை கருத்தில் கொண்டு வைத்தியசாலை சேவைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றார்.

 

 

Related

Tags: savakacherisrilanka newsvattukottai
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

33-வது ராஜன் கதிர்காமர் கிண்ணம்: 37 ஓட்டங்களால் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!

Next Post

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

Related Posts

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !
இலங்கை

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

2026-06-20
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!
இலங்கை

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

2026-06-20
ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!
இலங்கை

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

2026-06-20
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!
இலங்கை

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

2026-06-20
37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!
இலங்கை

37 கோடி ரூபா பெறுமதியான ‘ஹசீஸ்’ போதைப்பொருளுடன் கட்டுநாயக்கவில் வெளிநாட்டு மாணவன் கைது!

2026-06-20
நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!
இலங்கை

10 கோடி ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் கடவத்தையில் பிரதான கடத்தல்காரன் கைது!

2026-06-20
Next Post
யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

பெண் மருத்துவர் கொலை – உச்சநீதிமன்றின் அதிரடி அறிவிப்பு

மட்டக்களப்பில் 13 நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டு 3 வருடமாக தலைமறைவாகி வந்த ஒருவர் கைது

நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது!

யாழில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இளைஞர்!

  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

0
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

0
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

0
ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

0
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

0
புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

2026-06-20
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

2026-06-20
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

2026-06-20
ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

2026-06-20
பேருந்து சாரதிகள் பாதுகாப்பு சீட் பெல்ட்களை அணிவது கட்டாயம்!

இன்றுமுதல் கட்டாயமாக்கப்படும் ஆசனப்பட்டி அணியும் சட்டம் !

2026-06-20

Recent News

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

புதிய போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள், தெற்கு லெபனான் மீது இஸ்ரேல் வான்தாக்குதல்!

2026-06-20
காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

காணாமல் போனவர்களுக்கு புதிய இழப்பீட்டு முறை: விசேட குழு நியமனம் !

2026-06-20
குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

குண்டசாலையில் இளம் பெண் மர்ம மரணம்: கணவர் குடும்பத்தினர் மீது கொலைக் குற்றச்சாட்டு!

2026-06-20
ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

ஜனாதிபதிச் செயலாளருடன் அமைச்சுகளின் செயலாளர்கள் விசேட சந்திப்பு!

2026-06-20
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.