வடக்கு லண்டனில் யூத தொண்டு நிறுவனம் ஒன்றால் இயக்கப்படும் நான்கு அம்பியூலான்ஸ் வாகனங்கள் மீது நடத்தப்பட்ட தீ வைப்புத் தாக்குதல் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட இருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கோல்டர்ஸ் கிரீனில் நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் தீ வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 47 மற்றும் 45 வயதுடைய இரு ஆண்கள் நேற்று புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடரும் நிலையில், அவர்கள் இருவரும் ஏப்ரல் மாதம் வரை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக லண்டன் பெருநகர காவல்துறை இன்று தெரிவித்துள்ளது.
இருவரும் காவல் துறை காவலில் இருந்து விடுவிக்கப்பட்டிருந்தாலும், இந்தச் சம்பவத்தில் அவர்களின் சந்தேகிக்கப்படும் தொடர்பு குறித்து நாங்கள் தொடர்ந்து விசாரித்து வருவதால் கடுமையான பிணை நிபந்தனைகள் நடைமுறையில் உள்ளதாக இந்த விசாரணையை வழிநடத்தி வரும் பெருநகர காவல்துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைவரான கமாண்டர் ஹெலன் ஃபிளானகன் குறிப்பிட்டுள்ளார்.














