தொடர்ந்து நடைபெற்று வரும் ஈரான் போருக்கு மத்தியில், நாடு தழுவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படலாம் என்ற வதந்திகளை இந்திய அரசாங்கம் இன்று (27) நிராகரித்துள்ளது.
இந்தக் கூற்றுகள் முற்றிலும் போலியானவை என்று குறிப்பிட்ட இந்திய அரசாங்கத்தின் மத்திய பெற்றோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அத்தகைய எந்தவொரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு பற்றாக்குறை குறித்த கவலைகள் இந்தியாவில் ஊரடங்கு அமுல்படுத்தப்படலாம் என்ற யூகங்களுக்கு வழிவகுத்துள்ள நிலையில், ஹர்தீப் சிங் பூரியின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.














