மேற்கு ஆசியாவில் தொடரும் மோதல் காரணமாக எரிபொருள் விலைகள் கவலையளிக்கும் நிலையில் உள்ள வேளையில், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் முயற்சியாக பெற்றோல் மற்றும் டீசல் மீதான மேலதிக கலால் வரியை இந்திய அரசாங்கம் குறைத்துள்ளது.
வியாழக்கிழமை திகதியிட்ட அரசாணைப்படி, பெற்றோல் மீதான கலால் வரி முன்னர் லிட்டருக்கு ரூ.13 ஆக இருந்த நிலையில், தற்போது ரூ.3 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இது லிட்டருக்கு ரூ.10 குறைப்பைக் குறிக்கிறது.
அதேபோல், டீசல் மீதான கலால் வரி முன்பு லிட்டருக்கு ரூ.10 ஆக இருந்தது, தற்போது லிட்டருக்கு ரூ.0 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதுவும் லிட்டருக்கு ரூ.10 குறைப்பாகும்.
மேற்கு ஆசியாவில் ஏற்பட்ட மோதல் காரணமாக ஏற்பட்ட கடுமையான உயர்வுக்குப் பின்னர், உலகளாவிய மசகு எண்ணெய் விலைகள் நிலையற்றதாக இருக்கும் நேரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் இன்று காலை 8:40 மணி நிலவரப்படி, பிரென்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 1.28% சரிந்து $106.63 ஆகவும், அமெரிக்க மேற்கு இடைநிலை மசகு எண்ணெய் 1.04% சரிந்து ஒரு பீப்பாய்க்கு $93.50 ஆகவும் வர்த்தகமானது.
ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், தாக்குதல்களுக்கு இடைநிறுத்தம் இருக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வியாழனன்று தெரிவித்த கருத்துக்கள், எண்ணெய் சந்தையில் நிலவிய சில கவலைகளைத் தணிக்க உதவியுள்ளன.
இதன் விளைவாக, மசகு எண்ணெய் விலைகள் ஓரளவு தணிந்துள்ளன.
இதனால், இறக்குமதியை பெரிதும் சார்ந்துள்ள இந்தியா போன்ற நாடுகளுக்கு எரிபொருள் செலவுகள் மீதான உடனடி அழுத்தம் குறைந்துள்ளது.














