இலங்கை போக்குவரத்துக்கு சொந்தமான பேருந்து மீது தாக்குதல் நடத்திய தனியார் பேருந்து நடத்துனர் கைது செய்யப்பட்ட நிலையில், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் கூற்றுப்படி,
நபர் ஒருவர் தடி ஒன்றினால் பேருந்தை தாக்கும் விதமாக காணப்படும் கானொளி ஒன்று கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வந்தன.
குறித்த சம்பவமானது 2024.05.22 அன்று கலேவெல நகரில் இடம்பெற்ற சம்பவம் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
காணொளியில் தடி ஒன்றினால் ஆவேசமாக தாக்கும் நபர், தியசேன்புரவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தின் நடத்துநராக பணியாற்றியவராவார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளாகும் பேருந்து, தம்புள்ள டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து என்பது தெரியவந்துள்ளது.
அதே பாதையில், குறித்த நேரத்தில் இவ் இரண்டு பேருந்துகளும் செலுத்தப்பட்டதே இம் மோதலுக்குக் காரணமாக இருந்தது என்பது தெரியவந்துள்ளது.
தாக்க முயற்சி செய்யப்பட்டதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கலேவெல பொலிசாரால் சம்பவம் தொடர்பாக ஆவேசமாக நடந்துகொண்ட பேருந்து நடத்துநரை குற்றவியல் மிரட்டல் மற்றும் தாக்க முயற்சி செய்த குற்றச்சாட்டின் கீழ் மறுநாள் கைது செய்துள்ளனர்.
இத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.
மேலும் இலங்கை போக்குவரத்து சபை பேருந்திற்கும் சேதம் ஏற்படவில்லை.
சந்தேக நபருக்கு கடுமையான எச்சரிக்கை வழங்கி, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.













