மூத்த பாடலாசிரியர் ரத்ன ஸ்ரீ விஜேசிங்க, தேசிய நூலக மற்றும் ஆவணவாக்கல் சேவைகள் சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
பாடலாசிரியர் துறையில் நீண்ட காலப் பணி மற்றும் இலங்கை கலைத்துறைக்கு ஆற்றிய பங்களிப்புகளுக்காகப் பரவலாக மதிக்கப்படும் விஜேசிங்க, தனிப்பட்ட காரணங்களுக்காகவே இப்பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தார்.
இது தொடர்பில் குறிப்பிட்டுள் ளஅவர்,
தனிப்பட்ட காரணங்களால் நான் பதவி விலக முடிவு செய்துள்ளேன்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் மீதான எனது நம்பிக்கை மாறாமல் உள்ளது.
அவர்களுக்குத் தொடர்ந்து எனது ஆதரவை வழங்குவேன்.
எனது இந்த முடிவு முற்றிலும் தனிப்பட்டதாகும், குறிப்பாக எனது வயது தொடர்பானதே இதற்குக் காரணம்.
வேறு எந்தக் காரணமும் இல்லை.
அரசாங்கத்திற்கும் தனக்கும் இடையே எந்தவித முரண்பாடுகளும் இல்லை.
தனது பதவி விலகல் ஆகஸ்ட் 11 முதல் நடைமுறைக்கு வரும் – என்று கூறினார்.













