தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மேதின ஊர்வலம் கல்வியங்காடு சட்டநாதர் சிவன் கோவில் முன்பாக மதியம் 3.30 மணியளவில் ஆரம்பமாகி, இளங்கலைஞர் மண்டபம் வரை பேரணி சென்றது. இளங்கலைஞர் மண்டபத்தில் மாலை 4 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகியது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட செல்வராசா கஜேந்திரன் செயலாளர் , தமிழ் தேசிய மக்கள் முன்னணி. தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன், மற்றும் அரசியல் ஆய்வாளர் சோதி லிங்கம், சட்டத்தரணி க. சுகாஷ் உட்பட அரசியல் ஆர்வலர்கள், பொது மக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.












