2026 இந்தியன் பிரீமியர் லீக்கில் தொடரில் நேற்று இரவு சென்னையில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
போட்டியில் முதலில் துடுப்பாட்டம் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்களை எடுத்தது.
அந்த அணியில் கார்த்திக் சர்மா அதிகபடியாக 44 ஓட்டங்களை எடுத்தார்.
பந்து வீச்சில் ஹைதராபாத் அணி சார்பில் பேட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளையும், சகிப் ஹுசைன் இரண்டு விக்கெட்டுகளையும் அதிகபடியாக கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இஷான் கிஷனின் 70 ஓட்டங்கள் மற்றும் ஹென்ரிச் கிளாசனின் 47 ஓட்டங்கள் உதவியுடன், 19 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது.
இஷான் கிஷன் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்தப் போட்டிக்குப் பின்னர், ஒரு போட்டி கைவசம் இருக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தற்போது 16 புள்ளிகளுடன் பிளேஆஃப் சுற்றில் தங்கள் இடத்தை உறுதி செய்தது.
அதேநேரம், 16 புள்ளிகளுடன் குஜராத் டைட்டன்ஸ் அணி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
18 புள்ளிகளுடன் உள்ள ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, பிளேஆஃப் சுற்றில் தனது இடத்தை ஏற்கனவே உறுதி செய்துவிட்டது.
மறுபக்கம் 13 போட்டிகளில் இருந்து 12 புள்ளிகளுடன் உள்ள சூப்பர் கிங்ஸ் அணி, நாக் அவுட் சுற்றுக்கான போட்டியில் இருந்து இன்னும் முழுமையாக வெளியேறவில்லை.
இன்னும் ஒரே ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தகுதிச் சுற்றுக்கு வாய்ப்பு ஊசலாட்டத்தில் உள்ளது.
இதனிடையே, இன்று இரவு 7:30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.













