2026 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வாகன இறக்குமதிக்காக இலங்கை ஏற்கனவே சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.
இதனால், ஆண்டுச் செலவினம் முந்தைய கணிப்புகளைத் தாண்டி கணிசமாக உயரக்கூடும் என்ற கவலைகள் எழுந்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
தற்போதைய போக்கு தொடர்ந்தால், வாகன இறக்குமதி செலவுகள் ஆண்டு இறுதிக்குள் 2.4 பில்லியன் அமெரிக்க டொலரரை எட்டி, கடந்த ஆண்டின் 2 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற எண்ணிக்கையைத் தாண்டக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு செலவினம் ஏற்கனவே எதிர்பார்ப்புகளை மீறிவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்:
இறக்குமதிச் செலவு அதிகரித்து வந்தபோதிலும், அரசாங்கத்தின் வரி வருவாய் இலக்குகள் ஆபத்தில் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
திங்களன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.














