வடக்கு அயர்லாந்தின் கிழக்கு பெல்ஃபாஸ்ட் (Belfast) பகுதியில் உள்ள உலோக மறுசுழற்சி மையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் உலோக மறுசுழற்சி மைய பொருட்கள் பாரிய சேதமடைந்துள்ளன.
நேற்று பிற்பகல், வடக்கு அயர்லாந்து ‘டைட்டானிக் குவார்ட்டர்’ (Titanic Quarter) பகுதியில் உள்ள மறுசுழற்சி மையத்திலேயே இந்த தீ விபத்து இடம்பெற்றது.
இதேவேளை, இந்த தீ விபத்தின்போது “மறுசுழற்சி மையத்தில் இருந்த சுமார் 50 மீட்டர் நீள, அகலமுடைய பரப்பில் குவிக்கப்பட்டிருந்த சுமார் 2,500 தொன் இரும்புக்கழிவுகள் (Scrap metal) தீப்பற்றி எரிந்துள்ளன.
தீ விபத்தின் தீவிரம் உச்சத்தில் இருந்தபோது சுமார் 75 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்களின் பாரிய போராட்டத்தின் பின்னர் தீ தற்போதுக்கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.














