உலகக்கிண்ணக் காற்பந்துத் தொடரின் குழு நிலைப் போட்டிகளுடன் ஸ்கொட்லாந்து அணி ஏமாற்றத்துடன் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளரான ஸ்டீவ் கிளார்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் கானா அணிக்கு எதிராகக் குரோஷியா பெற்ற வெற்றியானது, உலகக்கிண்ணத்தில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் ஸ்கொட்லாந்தின் சிறு எதிர்பார்ப்பையும் முற்றாகத் தகர்த்தது.
இந்த முடிவு வெளியான சில நிமிடங்களிலேயே ஸ்கொட்லாந்து காற்பந்து சங்கம் ஸ்டீவ் கிளார்க்கின் விலகல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
ஒரு மாதத்திற்கு முன்பாக ஸ்கொட்லாந்து அணியுடன் மேலும் நான்கு ஆண்டுகளுக்கான புதிய ஒப்பந்தத்தில் ஸ்டீவ் கிளார்க் கையெழுத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 1998 உலகக்கிண்ணத் தொடருக்குப் பின்னர் ஸ்கொட்லாந்து அணி எந்தவொரு பெரிய சர்வதேசத் தொடருக்கும் தகுதி பெறாமல் இருந்தது.
அந்தப் பின்னடைவை உடைத்து 7 ஆண்டுகளுக்கு முன் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஸ்டீவ் கிளார்க், அணியை இரண்டு ஐரோப்பிய கிண்ணத் தொடர்களுக்கும் , நடப்பு உலகக்கிண்ணத் தொடருக்கும் தகுதி பெறச் செய்து சாதனை படைத்தார்.
எனினும், தகுதிச் சுற்றுகளில் காட்டிய பலத்தை முதன்மைத் தொடர்களில் அணியால் தக்கவைக்க முடியாமல் போனதே இந்த ராஜினாமாவுக்குக் காரணமாகும்.

















