இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று (02) ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சியுடன் நடத்திய கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின் தொடக்க உரையில் ஜப்பானுடனான உறவுகளைப் பாராட்டினார்.
இரு தலைவர்களும் பொருளாதாரப் பாதுகாப்பு, எரிசக்தி மீள்திறன், செயற்கை நுண்ணறிவு, முக்கிய கனிமங்கள், மருந்துத் துறை, பொதுப் போக்குவரத்து, உயிரிவாயு மற்றும் எண்ணெய், எரிவாயுவின் மூலவள மேம்பாடு உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்த கூட்டுப் பிரகடனத்தை அறிவித்து, ஒரு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
கூட்டு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அறிவித்த பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் தாங்கள் ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு ஆகிய துறைகளிலும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
















