உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், உலகின் மிக உயரிய ‘பலோன் டி ஓர்’ (Ballon d’Or) விருதை வெல்வதற்கான போட்டியில் முன்னணி நட்சத்திரங்கள் களம் இறங்கியுள்ளனர்.
ஒக்டோபர் 26 ஆம் திகதி நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில், இம்முறை புதிய வெற்றியாளர் உருவாகுவாரா என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது.
உலகக் கிண்ணப் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின் வீரர்கள் உட்பட, லியோனல் மெஸ்ஸி, ஹாரி கேன், லாமின் யமால், ரோட்ரி, எம்பாப்பே, டெம்பேலே, பெலிங்கம், பாவ் குபார்சி மற்றும் ஃபேபியன் ரூயிஸ் ஆகிய 9 வீரர்கள் இவ்விருதைப் பெறத் தகுதியானவர்களாகக் கணிக்கப்பட்டுள்ளனர்.





















