நிலக்கரித் தட்டுப்பாடு நிலவிய போதிலும், எதிர்காலத்தில் மின்வெட்டு எதுவும் இருக்காது என்று துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் அனுர கருணாதிலக உறுதியளித்துள்ளார்.
நிலக்கரித் தட்டுப்பாட்டால் மின்சார விநியோகத்தில் இடையூறு ஏற்படலாம் என்று எதிர்க்கட்சியைச் சேர்ந்த சிலர் முன்வைக்கும் கருத்துகள் குறித்துப் பொதுமக்கள் தேவையற்ற கவலை கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டார்.
அடுத்த ஓராண்டுக்குள் காற்றாலை மின் திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மேலதிக 400 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படும் என்றும், இதன் மூலம் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் மேலும் வலுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கருணாதிலக மேலும் தெரிவித்தார்.







