‘முச்சக்கர வண்டி இயக்குவதற்கான குறைந்தபட்ச வயதை 40 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். பாடசாலையை விட்டு வெளியேறிய உடனேயே முச்சக்கர வண்டி வாங்கி வீதிகளில் இயக்கும் நிலை இருக்கக் கூடாது என தொழிற்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவஹே தெரிவித்தார்.
இளைஞர்கள் தொழிற்கல்வியைத் தெரிவு செய்வதற்குப் பதிலாக எளிதில் வருமானம் ஈட்டும் வழியாக முச்சக்கர வண்டி சாரதிகளாக மாறி வருவது தொடர்பில் கவலை நிலவுகிறது. நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறைக்குத் தீர்வு காணும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த நடவடிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.













