பொலன்னறுவை – ஹபரணை பிரதான வீதியில், மின்னேரியாவின் 7 ஆவது மைல்கல் பகுதியில், பயணிகள் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இன்று (10) அதிகாலை சுமார் 4:45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.
பேருந்து கவிழ்ந்ததில் காயமடைந்த 22 பேர் ஹபரணை மற்றும் ஹிங்குரக்கொட வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்னேரியா பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து தொடர்பில் மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














