எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்குப் பின்னர் ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
அத்துடன், ஈரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய ஒரு தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்போவதாகவும் அவர் மீண்டும் எச்சரித்தார்.
ஆறு மாதங்களாக நடைபெற்று வரும் போரின் தொடக்கத்திலிருந்தே கப்பல் போக்குவரத்தின் மீது இரு தரப்பினரும் நடத்திய தாக்குதல்களிலேயே மிகப்பெரிய அளவிலான தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதனிடையே, யேமனின் ஈரான் ஆதரவு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுடனான மோதல்கள் தீவிரமடைந்த நிலையில், தென்மேற்கு நகரமான காமிஸ் முஷைத்தில் சவுதி சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் 24 மணி நேரத்திற்குள் நான்காவது முறையாக அவசரக்கால எச்சரிக்கைகளை வியாழக்கிழமை (10) வெளியிட்டனர்.
இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்திருந்தது.
அத்துடன், ஹார்முஸ் நீரிணை மற்றும் செங்கடல் வழியாகச் செல்லும் விநியோகப் பாதைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரெண்ட் மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 100 டொலருக்கும் அதிகமாகவே நீடித்தது.
அமெரிக்கா ஈரானின் ஐந்து எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது.
இதனால், புதன்கிழமையன்று ஹார்முஸ் நீரிணைக்கு அருகே 10 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் கூறியது.













