• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு
அரசியல் தீர்வுக்கு மோடியை நாடிய தமிழ் தலைவர்கள் – அபிவிருத்தி பணிகளே நல்லிணக்கம் என்கின்றார் ஜனாதிபதி

அரசியல் தீர்வுக்கு மோடியை நாடிய தமிழ் தலைவர்கள் – அபிவிருத்தி பணிகளே நல்லிணக்கம் என்கின்றார் ஜனாதிபதி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2022/01/19
in ஆசிரியர் தெரிவு, இலங்கை, முக்கிய செய்திகள்
79 0
A A
0
44
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண்பதை உறுதிசெய்ய இந்தியாவின் உதவியை கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் பேசும் கட்சிகளின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து கடிதம் எழுதியுள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று (செவ்வாய்க்கிழமை) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்து கடிதம் ஒன்றை கையளித்தது.

இலங்கையில் அரசாங்கங்களினால் வழங்கப்பட்ட பல நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் 13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கும் அதற்கு அப்பால் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை உறுதிப்படுத்துவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி ஏழு பக்க கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

1987 இன் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் காலத்திலிருந்து, பல்வேறு நிபுணர் குழுக்களால் உருவாக்கப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில், அரசியல் தீர்வைக் கொண்டு வருவதற்கான கடந்த கால முயற்சிகளை இந்த கடிதம் சுட்டிக்காட்டுகின்றது.

பல்வேறு கட்டங்களில் இந்திய அரசியல் தலைமையின் தலையீடுகள் குறிப்பாக 2015 இல் இலங்கை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி ஆற்றிய உரை உள்ளிட்ட விடயங்களை மேற்கோளிட்டு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு, கிழக்கில் தமிழர்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிப்பு மற்றும் திட்டமிட்ட மீள்குடியேற்றம் மலையகத்தில் வாழும் மலையகத் தமிழர்கள் உட்பட தமிழ் பேசும் மக்களின் மொழி உரிமைகள் போன்றவற்றின் மீதான தாக்குதல் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அதிகாரப் பகிர்வை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் விதிகளை முழுமையாக அமுல்படுத்துவதற்கான வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என பிரதமர் மோடியிடம் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒன்றுபட்ட, பிரிக்கப்படாத நாடு என்ற கட்டமைப்பிற்குள் சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்தி, அவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வாழ்விடங்களில், கண்ணியத்துடனும், சுயமரியாதையுடனும், அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்றும் இலங்கை அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை செயற்படுத்த இந்தியாவின் அழுத்தத்தையும் அவர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு குறித்து அரசின் கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தாம் நம்புவதாகவும் கூறினார்.

ஆனால் அவர் கூறிய புதிய அரசியலமைப்பில் தமிழ் அரசியல் தலைமைகள் தொடர்ச்சியாக வலியுறுத்தும் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து எதுவும் குறிப்பிடவில்லை.

மறுபுறம் போரினால் பாதிக்கப்பட்டபகுதிகளில் நடைபெறும் அபிவிருத்தி பணிகளே நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாக கருதுவதாக கூறியிருந்தார்.

எனவே அரசியல் ரீதியிலான முரண்பாடுகளை தற்காலிகமாவது ஒதுக்கிவைக்குமாறு வடக்கு மற்றும் கிழக்கு மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

அத்தோடு நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை ஆதரிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்துகோட்டாபய ராஜபக்ஷ இதுவரை தமிழ் தலைமைகளுடனோ அல்லது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனானோ பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

முல்லைத்தீவு வீராங்கனைக்கு சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம்!

Next Post

போர்க்கால மனநிலையிலிருந்து உலக நாடுகள் வெளிவர வேண்டும் என சீனா அழைப்பு

Related Posts

பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!
ஆதவனின் ஜோதிடம்

பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

2026-01-29
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்
இலங்கை

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு
யாழ்ப்பாணம்

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
ஹோட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்ட சடலம்!
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

2026-01-28
காலவரையற்ற தொழிற்சங்கப் போராட்டத்தை இன்று ஆரம்பிக்கும் GMOA!
இலங்கை

எதிர்வரும் 48 மணித்தியாலங்களின் பின்னர் தொழிற்சங்க நடவடிக்கை தீவிரம்!

2026-01-28
சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி
இலங்கை

சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது-அமலராஜ் அமலநாயகி

2026-01-28
Next Post
சீன ஜனாதிபதி ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டில் கலந்துக் கொள்வது சந்தேகம்!

போர்க்கால மனநிலையிலிருந்து உலக நாடுகள் வெளிவர வேண்டும் என சீனா அழைப்பு

விண்ணுக்கு அனுப்பப்படும் இளையராஜாவின் இசை!

விண்ணுக்கு அனுப்பப்படும் இளையராஜாவின் இசை!

பதவிக்கு அச்சுறுத்தல், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த பிரதமர் ஜோன்சன் திட்டம்

பதவிக்கு அச்சுறுத்தல், கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த பிரதமர் ஜோன்சன் திட்டம்

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

0
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

0
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

0
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

0
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

0
பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

2026-01-29
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

2026-01-28

Recent News

பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான வானிலை!

2026-01-29
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நட்டம்

2026-01-28
சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

சிக்கன் சாப்பிட்டா சிக்குன்குனியா வருமா?

2026-01-28
சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

2026-01-28
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.