• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home ஆசிரியர் தெரிவு

அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியாவுடன் இணைக்க முயற்சி?

1.094 Views
4 years ago
76 1
0
Share
Facebook Twitter WhatsApp
    யே.பெனிற்லஸ் யே.பெனிற்லஸ்
    0 Subscriber

    அனுராதபுரத்தின் இரு கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைத்து இன விகிதாசாரத்தினை மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும் நிலையில் அதற்கான அனுமதி கோரிய பத்திரம் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

    வவுனியா ஈரப்பெரியகுளத்திலுள்ள மண்டபமொன்றில் சிரதம்பரபுரம் கோமரசன்குளம் மதுராநகர் கிராம மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “பொருளாதார நெருக்கடிகளினால் ஒப்பந்தக்காரர்கள் தாம் எடுத்த ஒப்பந்தங்களை முடிவுறுத்த முடியாதுள்ளனர். இவற்றுக்கு சீமெந்து பொருட்களின் விலையேற்றம் உட்பட கட்டட பொருட்களின் விலையேற்றம் காரணமாக உள்ளது.

    அத்துடன் மக்கள் யுத்த காலத்தினை போன்று பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். விவசாயிகள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

    இதற்கு நாட்டின் ஜனாதிபதியும், அமைச்சரவையும் எடுக்கும் தவறான கொள்கையே காரணமாக இருக்கின்றது. இதனால் மக்கள் மிகப்பெரும் சவாலான வாழ்க்கைக்கு உட்பட்டிருக்கின்றனர்.

    2015 இல் இருந்து 2019 வரையும் வடக்கு கிழக்கில் இடம்பெறவிருந்த சிங்கள குடியேற்றங்களை நாம் தடுத்து நிறுத்தியிருந்தோம். எனினும் 2019 நவம்பர் மாத்திற்கு பிற்பாடு வட மாகாணத்தில் வவுனியா முல்லைத்தீவில் தென் பகுதியில் இருந்து சிங்கள மக்கள் கொண்டுவரப்பட்டு குடியேற்றப்பட்டு வருகின்றனர். வடக்கில் தமிழர்களின் விகிதாரசாரத்தினை மாற்றியமைப்பதற்காக இது மிக தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.

    இந்த குடியேற்றத்தினை இரண்டு வகையாக மேற்கொள்கின்றனர். அதாவது இங்குள்ள அரச காணிகளில் தென்பகுதியில் இருந்து கொண்டு வந்து குடியெற்றுவது மற்றையது ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு அனுராதபுரம் மாவட்டத்துடன் உள்ள கிராமங்களை வவுனியா மாவட்டத்துடன் இணைப்பதாக உள்ளது.

    அண்மையில் போகஸ்வௌ கிராமத்திற்கு ஜனாதிபதி வந்தபோது திட்டமிட்டு கெப்பிட்டிகொல்லாவையில் உள்ள கிராமத்தில் இருந்து அனுராதபுரத்திற்கு செல்வது கடினம் எனவும் வவுனியா நகரத்திற்கு செல்வது இலகு என்பதால் தமது கிராமங்களை வவுனியாவுடன் இணைத்து விடுமாறு பிரதேசசபை உறுப்பினரொருவரால் கூறப்பட்டிருந்தது.

    இதன் பிரகாரம் அண்மையில் வவுனியா மாவட்ட அபிவிருத்திகுழு கூட்டத்தில் அனுராதபுரம் கெப்பிட்டிகொல்லாவ பிரதேச செயலகத்தின் கனகவௌ என்ற கிராம சேவகர் பிரிவையும் பதவிய பிரதேச செயலகப்பிரிவில் உள்ள கம்பெலிய என்ற கிராம சேவகர் பிரிவையும் முழுமையாக வவுனியா மாவட்டத்துடன் இணைப்பதற்கான அனுமதி பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

    இதற்கு எதிராக நாம் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் குரல்கொடுத்து வருகின்றோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

    Related

    Category: ஆசிரியர் தெரிவு இலங்கை வட மாகாணம் வவுனியா
    Tags: அனுராதபுரம்சார்ள்ஸ் நிர்மலநாதன்
    Lyca Mobile UK Lyca Mobile UK

    Related Posts

    பேரிடரிலும் மக்களின் அசைக்க முடியாத மன வலிமையை பாராட்டிய பிரதமர்!
    இலங்கை

    பேரிடரிலும் மக்களின் அசைக்க முடியாத மன வலிமையை பாராட்டிய பிரதமர்!

    2025-12-05
    இந்திய மருத்துவக் குழுவால் அமைக்கப்படும் செயல்படும் கள மருத்துவமனை!
    இலங்கை

    இந்திய மருத்துவக் குழுவால் அமைக்கப்படும் செயல்படும் கள மருத்துவமனை!

    2025-12-05
    நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில்  மிதந்துவந்த  ஒருதொகை வெளிநாட்டு சிகரெட்டுகள் உட்பட பல பொருட்கள்!
    இலங்கை

    நெடுந்தீவு தெற்கு கடற்பகுதியில் மிதந்துவந்த ஒருதொகை வெளிநாட்டு சிகரெட்டுகள் உட்பட பல பொருட்கள்!

    2025-12-05
    இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியுடன் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு!
    இலங்கை

    இந்திய துணைத் தூதுவர் சாய் முரளியுடன் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் சந்திப்பு!

    2025-12-05
    ரயில் பருவச் சீட்டுகளை பேருந்துகளில் பயன்படுத்தி பயணிக்கலாம்!
    இலங்கை

    ரயில் பருவச் சீட்டுகளை பேருந்துகளில் பயன்படுத்தி பயணிக்கலாம்!

    2025-12-05
    கொழும்பு ஜெம்பெட்டா வீதியில் 5 வீடுகள் இடிந்து வீழ்ந்தன : உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது
    இலங்கை

    கொழும்பு ஜெம்பெட்டா வீதியில் 5 வீடுகள் இடிந்து வீழ்ந்தன : உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது

    2025-12-05
    Next Post
    கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் காலமானார்

    அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது லதா மங்கேஷ்கரின் உடல்!

    Athavan News

    24/7 Tamil news updates from Sri Lanka.
    Email: athavaneditor@gmail.com
    Phone
    Sri Lanka: 0094114063006
    UK: 00447459300554

    Follow Us

    Athavan tv
    Athavan Radio
    • About
    • Advertise
    • Privacy Policy
    • Contact Us

    © 2024 Athavan Media, All rights reserved.

    Welcome Back!

    Login to your account below

    Forgotten Password?

    Retrieve your password

    Please enter your username or email address to reset your password.

    Log In

    Add New Playlist

    No Result
    View All Result
    • HOME
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
    • இங்கிலாந்து
    • ஐரோப்பா
    • கனடா
    • விளையாட்டு
    • சினிமா
    • கட்டுரைகள்

    © 2024 Athavan Media, All rights reserved.

    This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.