• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லும்வரை போராட்டங்கள் தொடரும்- ஜே.வி.பி.

பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லும்வரை போராட்டங்கள் தொடரும்- ஜே.வி.பி.

ஏ.பி. by ஏ.பி.
2022/07/22
in இலங்கை
75 1
A A
0
47
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

ராஜபக்ஷக்களின் வேலைத்திட்டத்தைக் கையில் எடுத்தே போராட்டக்காரர்களை, இராணுவ பலம் கொண்டு புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அடக்க முற்படுகிறார் என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

மேலும், மக்களால் நிராகரிக்கப்பட்ட நாடாளுமன்றத்தை உடனடியாக கலைத்து பொதுத் தேர்தலொன்றுக்கு செல்லும்வரை மக்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியாக பதவியேற்ற நேரத்திலிருந்தே போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.

அதன் ஓர் அங்கமாகவே, இன்று காலி முகத்திடல் போராட்டக்காரர்கள், அங்கு செய்தி சேகரிக்க சென்ற தேசிய மற்றும் சர்வதேச ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அங்குள்ள நிர்மானங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளன. இதுவரை 10 பேரளவில் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் காயமடைந்துள்ளார்கள்.

அச்சுறுத்தல்களை மேற்கொண்டு மக்களை கட்டுப்படுத்தவே ரணில் விக்கிரமசிங்கவும், ராஜபக்ஷவினரும் தற்போது முற்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அடக்குமுறைகளால் மக்களைக் கட்டுப்படுத்த முடியாது என்பதை அவர்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்ஷக்களின் ஆதரவுடன் தான் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனவே, மக்களுக்கு அன்றி ராஜபக்ஷவினருக்கு விஸ்வாசமாக செயற்பட வேண்டும் என்றே அவர் நினைப்பார்.
ராஜபக்ஷவினரின் வேலைத்திட்டத்தையே அவர் இன்று கையில் எடுத்துள்ளார். அதன் ஓர் அங்கமாகவே இந்த தாக்குதல் சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

இது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முதலும் கடைசியுமான அடக்குமுறையாக இருக்கும் என நாம் நம்புகிறோம்.

இவருக்கு மக்கள் ஆணைக்கிடையாது. மக்கள் ஆணையின்றி ஜனாதிபதியான இவரை மக்களும் ஜனாதிபதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

மக்கள் எதிர்ப்பை இவர் இன்னமும் புரிந்துக் கொள்ளவில்லை. 5 வருடங்களுக்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதியை 2 வருடங்களிலேயே மக்கள் விரட்டியடித்துள்ளார்கள். இந்த நிலைமை எல்லாம் புதிய ஜனாதிபதிக்கு புரியவில்லை என்றே தெரிகிறது.

இராணுவம் கொண்டு மக்களை அடக்கிவிட முடியாது. அவ்வாறான அடக்குமுறைகளுக்கு நாம் என்றும் இடமளிக்கவும் போவதில்லை.

இந்தப்போராட்டங்கள் எதிர்க்காலத்திலும் தொடரும். மக்களின் உண்மையான எதிரி யார் என்பதை முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி மட்டுமன்றி, ஒட்டுமொத்த நாடாளுமன்றமும் மக்களால் நிராகரிக்கப்பட்டதாகும். எனவே, உடனடியாக நாடாளுமன்றத்தை கலைத்து, மீண்டும் பொதுத் தேர்தலொன்றுக்கு செல்ல வேண்டும்.

அவ்வாறு இடம்பெற்றால் மட்டுமே நாட்டை மீட்டெடுக்க முடியும். அதுவரை இந்தப் போராட்டமும் தொடரும்- என்றார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அறவழியில் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கோழைத்தனமானது – சஜித்!

Next Post

நாட்டை வந்தடைந்தது சீன அரிசி கப்பல்!

Related Posts

மட்டுவில் 8 பேர் கைது
இலங்கை

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு
இலங்கை

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
இலங்கை

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!
இலங்கை

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

2026-01-18
வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.
இலங்கை

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

2026-01-18
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு – சிறுவர்கள் இருவர் படுகாயம்!
இலங்கை

ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது!

2026-01-18
Next Post
கிடுக்குப் பிடியில் சீனா! பின்வாங்குகிறதா இலங்கை அரசாங்கம்?

நாட்டை வந்தடைந்தது சீன அரிசி கப்பல்!

சுகாதார ஊழியர்களுக்கான எரிபொருள் வழங்கும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

40 ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோலை ஏற்றிய கப்பல் இன்று நாட்டிற்கு வருகின்றது!

கம்பஹாவின் பல பகுதிகளில் 14 மணி நேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 07 மணித்தியால நீர்வெட்டு!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

0
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

0
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

0
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

0
ஜிந்துப்பிட்டியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு – சிறுவர்கள் இருவர் படுகாயம்!

ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது!

0
மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

2026-01-18
வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன்.

2026-01-18

Recent News

மட்டுவில் 8 பேர் கைது

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 882 சந்தேகநபர்கள் கைது!

2026-01-18
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் துப்பாக்கி பிரயோகம் : 42 வயதான ஒருவர் உயிரிழப்பு

அலவ்வ பகுதியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!

2026-01-18
பிரட்டரிக் கோட்டை வாயிலில்  சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

பிரட்டரிக் கோட்டை வாயிலில் சட்டவிரோத கட்டுமானப்பணிகள் – பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

2026-01-18
தியோகுநகர் ,  தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

தியோகுநகர் , தீர்த்தக்கரைப் பகுதிகளில் வீதிகள் சீரின்மையால் பொதுமக்கள் சிரமம்!

2026-01-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.