• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இலங்கைக்கான கடன் தொடர்பில் சீனா சாதகமான பதில்!

சீன கடன்களின் நிர்மாணங்களால் வருமானமில்லாதிருக்கும் இலங்கை!

யே.பெனிற்லஸ் by யே.பெனிற்லஸ்
2023/03/30
in இலங்கை
68 1
A A
0
29
SHARES
979
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக்கு நீடிக்கப்பட்ட கடன் வசதியை சர்வதேச நாணய நிதியம் இப்போது வழங்கியுள்ளது.

இந்த நிலையில் இலங்கை தற்போது தனது மறுசீரமைப்பு விடயத்தினை இறுதி செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது.

அதுவொருபக்கமிருக்கையில், சீனாவிடமிருந்து கடன்களைப் பெற்று நிர்மாணிக்கப்பட்டு தற்போது ‘வெள்ளை யானைகளாக இருக்கும் தாமரைக் கோபுரம், அம்பாந்தோட்டை துறைமுகம் போன்றவற்றுக்கான விரயச் செலவுக்களையும் அதற்கான கடன்களையும் இலங்கை எவ்வாறு மறுசீரமைப்புச் செய்யப்போகின்றது என்பது பெருங்கேள்வியாகின்றது.

நாட்டின் சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில் முதன்முறையாக இலங்கை தற்போது வெளிநாட்டு நாணய இறையாண்மைக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் உள்ளது.

கடுமையான வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு காரணமாக, உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற பலதரப்பு நிறுவனங்களுக்கு திருப்பிச் செலுத்துவதைத் தவிர, வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவதை நிறுத்துவதாக ஏப்ரல் 12 அன்று இலங்கை அறிவித்தது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க, இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமொன்றில் பிரவேசித்து திருப்பிச் செலுத்துதல் இடைநிறுத்தப்பட்ட வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க விரும்புவதாக வலியுறுத்தினார்.

இலங்கை ஏப்ரலில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்தது, மேலும் கடன் மறுசீரமைப்பு செயல்முறைக்கான சட்ட மற்றும் நிதி ஆலோசகர்களை மே 24 அன்று நியமித்தது.

சீனாவுக்கான இலங்கையின் கடன் பொறுப்புகள் பெரும்பாலும் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளப்பட்டாலும், சீனா இலங்கையின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்குனராக உள்ளது என்பதே உண்மை. இந்தக் காரணத்திற்காகவே, இலங்கையின் கடன் மறுசீரமைப்புச் செயல்பாட்டில் சீனா முக்கிய பங்கு வகிக்கிறது.

மதிப்பீடுகளின்படி, 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பொதுத்துறையின் நிலுவையில் உள்ள 26.4 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு நாணயக் கடனில், 12 ஏப்ரல் 2022 அன்று திருப்பிச் செலுத்துதல் இடைநிறுத்தப்பட்டது. அதில்சுமார் 7.1 பில்லியன் டொலர்கள் சீனாவிடமிருந்து கடனாகும்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மறுசீரமைக்கப்பட வேண்டிய வெளிநாட்டுக் கடனில் சுமார் 26சதவீதம் சீனக் கடனாளிகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

சுமார் 4.3 பில்லியன் டொலர்கள் நிலுவையில் உள்ள கட்டணங்களை சீனாவின் எக்சிம் வங்கிக்கும், 2.8 பில்லியன் டொலர்கள் சீனாவின் அபவிருத்தி வங்கிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், இலங்கை அரசின் கடனில் 10சதவீதம் மட்டுமே சீனாவிடம் இருந்து பெறப்பட்டதாக கூறப்படுகின்றது. ஆனால் உண்மையில், பொது மற்றும் பொது உத்தரவாதக் கடன் எனப்படும் பரந்த வரையறையைப் பயன்படுத்தி, அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள சீனாவின் வணிகக் கடன் மற்றும் இலங்கை அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள  கடன் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளும்போது, 2021இன் இறுதியில் பங்கு 19.9சதவீதமாக உயருகிறது.

எவ்வாறாயினும், 2005 மற்றும் 2010க்கு இடைப்பட்ட காலத்தில், இலங்கைக்கான சீன கடனுதவியின் முதல் கட்டம், வழங்கல்களில் விரைவான அதிகரிப்பு என அடையாளம் காண முடிகிறது. இந்தக் காலகட்டத்தில், சீனா உள்கட்டமைப்பு திட்டத்திற்கான பெரிய அளவிலான வணிக கடன் வழங்குபவராக மாறியது.

நுரோச்சோலை நிலக்கரி மின் நிலையம் (1.3 பில்லியன் டொலர்கள்), அம்பாந்தோட்டை துறைமுகம் (372 மில்லியன் டொலர்கள்), மத்தள சர்வதேச விமான நிலையம் (191 மில்லியன் டொலர்கள்) மற்றும் கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை (248 மில்லியன் டொலார்கள்).

இந்தக் காலப்பகுதியில் இந்தத் திட்டங்களுக்காக மொத்தம் சுமார் 1.4 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளன.

2009 ஆம் ஆண்டு வரை இலங்கை உள்நாட்டு மோதலில் ஈடுபட்டிருந்த நிலையில், 2006-2010 காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடனுக்கான சராசரி பயனுள்ள வட்டி வீதம் 3.1சதவீதம் மட்டுமே காணப்பட்டபோதும் சீனாவின் மேற்படி கடன்களில் சிலவற்றுக்கு 6.5சதவீதமான வட்டியும் அறவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, 2011 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் சீனாவின் கடனுதவியின் இரண்டாம் கட்ட விரைவான அதிகரிப்பை அடைந்தது.

மேற்கூறிய திட்டங்களை விரிவுபடுத்துவதற்காகவும், புகையிரத, அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் கிராமப்புற வீதிகள் உட்பட சில புதிய போக்குவரத்துத் திட்டங்களுக்காகவும் இலங்கை அரசாங்கம் மேலும் கடன்களை வாங்கியது.

எனினும், 2005-2010இல் பெறப்பட்ட சில ஆரம்பக் கடன்களின் முதலைத் திருப்பிச் செலுத்துவதற்கான சலுகைக் காலங்கள் முடிவடைவதோடு, 2013 முதல் முதல் கொடுப்பனவுகள் கணிசமாக அதிகரித்தன.

இந்த ஒருங்கிணைப்புக் காலத்தில் 3.1 பில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது, அதேசமயம் மொத்தக் கடன் சேவை 0.6 பில்லியன் டொலாகளாகியது.

இந்த நிலைமைகளின் பின்னரும் தாமரைக் கோபுர நிர்மாணம் மேற்கொள்ளப்பட்டது. அதனால் ஈட்பட்ட வருமானம் குறிப்பிடும் படியாக இல்லை.

இந்த நிலையில் சீனாவிடமிருந்து இலங்கை பெற்ற கடன்களின் முதலீட்டால் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணங்களின் வருமானங்கள் போதுமானதாக இல்லை.

இதனால் தற்போது அவற்றுக்கான கடன்களை மீளச் செலுத்துவதில் நெருக்கடிகள் வெகுவாக அதிகரித்துள்ளன.

Related

Tags: சீன கடன்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

குழந்தைகளின் போசாக்கின்மை தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நாடாளுமன்றக் குழு நியமனம்!

Next Post

ஐ.எம்.எஃப்.இன் கடன் உதவியை எதிர்ப்பவர்கள் நாட்டின் எதிரிகள்: சம்பிக்க

Related Posts

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!
இலங்கை

பேருந்து முதல் டிப்பர் வரை – சாரதிகளுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

2026-09-15
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 
இலங்கை

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

2026-09-15
திடீர் சுற்றிவளைப்பில் யாழ்ப்பாணத்தில் 531 பேர் கைது!
இலங்கை

களுபோவில அவிஷ்கவின் போதைப்பொருள் வலையமைப்பு நடத்துனர் கைது!

2026-09-15
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபரொருவர் கொலை!
இலங்கை

கூர்மையான ஆயுதங்களினால் தாக்கப்பட்ட சம்பவங்களில் இருவர் உயிரிழப்பு!

2026-09-15
நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!
ஆசிரியர் தெரிவு

நாட்டின் சில பகுதிகளில் 100 மி.மீ. மழைக்கான சாத்தியம்!

2026-09-15
மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு  அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!
இலங்கை

மீன்பிடி அனுமதி பத்திரத்திற்கு அதிகாரிகள் 7 இலட்சம் இலஞ்சம்!

2026-09-14
Next Post
டெல்டா வைரஸ் பரவலுக்கு ரஷ்யா- உக்ரைன் உள்ளிட்ட சுற்றுலாப்பயணிகளின் வருகையே காரணம்- சம்பிக்க

ஐ.எம்.எஃப்.இன் கடன் உதவியை எதிர்ப்பவர்கள் நாட்டின் எதிரிகள்: சம்பிக்க

நியாயமற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக தொழிற்சங்க நடவடிக்கை!

தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்த தீர்மானம்!

பரிசோதனைகளுக்கு அதிகக் கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைகளுக்கு அபராதம்!

பரிசோதனைகளுக்கு அதிகக் கட்டணம் அறவிட்ட தனியார் வைத்தியசாலைகளுக்கு அபராதம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

0
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

0
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

பேருந்து முதல் டிப்பர் வரை – சாரதிகளுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

0
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

0
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

0
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 

2026-09-15
பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

பயணக் கட்டுப்பாடுகளை கடுமையாக்கிய சீனா!

2026-09-15
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்!

பேருந்து முதல் டிப்பர் வரை – சாரதிகளுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

2026-09-15
சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

சவுதி எண்ணெய் வழித்தடம் ஆபத்தில்; உலக சந்தையில் அதிர்ச்சி அலை!

2026-09-15
விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

விமான நிலையத்தில் கைவிடப்பட்ட 32 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு! 

2026-09-15
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.