கண்டி, மாவனெல்லை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் அறையொன்றில் இருந்து 36 வயதுடைய நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் வெலிகன்ன பகுதியில் வசிப்பவர் எனவும் ஹோட்டல் ஊழியர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கேகாலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாவனெல்ல பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














