• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு கிரிக்கெட்
பிடியாணை உத்தரவின் பின் மெளனம் கலைத்தார் உத்தப்பா!

பிடியாணை உத்தரவின் பின் மெளனம் கலைத்தார் உத்தப்பா!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/12/22
in கிரிக்கெட், விளையாட்டு
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

வருங்கால வைப்பு நிதி (PF) மோசடி வழக்கு தொடர்பில் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ரோபின் உத்தப்பா (Robin Uthappa), சனிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

தனது எக்ஸ் கணக்கில் குறித்த அறிக்கையை வெளியிட்ட அவர், மோசடி தொடர்பில் சம்பந்தப்பட்ட எந்த நிறுவனத்திலும் தாம் நிர்வாகப் பங்கு வகிக்கவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

மேலும் குறித்த நிறுவனங்களுக்கு கடன் உதவிகள் மூலம் தான் அளித்த நிதி பங்களிப்பு காரணமாக, 2018-19 இல் பணிப்பாளராக நியமிக்கப்பட்டதாகவும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் குறிப்பிட்டார்.

மேலும், ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் வர்ணனையாளர் போன்ற எனது பணிச் சுமையினால், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிறுவனங்களில் செயற்பாடுகளில் தலையிடுவதற்கு எனக்கு நேரமும் நிபுணத்துவமும் இல்லை.

உண்மையில், நான் நிதியளித்த எந்த நிறுவனங்களிலும் இன்றுவரை நான் நிர்வாகப் பாத்திரத்தை வகிக்கவில்லை என்றும் உத்தப்பா தெளிவுபடுத்தியுள்ளார்.

வருங்கால வைப்பு நிதி விடயத்தில் ஊழியர்களையும் அரசாங்கத்தையும் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில் முன்னாள் இந்திய வீரர் ரோபின் உத்தப்பாவுக்கு (Robin Uthappa) எதிராக பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்டாரஸ் லைஃப்ஸ்டைல் ​​பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் (Centaurus Lifestyle Brands Private Limited) பணிப்பாளரான, உத்தப்பா, சம்பளத்தில் இருந்து வருங்கால வைப்பு நிதி பங்களிப்பைக் கழிப்பதன் மூலம் ஊழியர்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

குறித்த நிதியானது ஊழியர் கணக்கில் வைப்பிலிடப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, வருங்கால வைப்பு நிதியின் பிராந்திய ஆணையர் சடாக்சரி கோபால், கர்நாடக மாநிலம் புலகேசிநகர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

அதில், குறித்த நிதி மோசடியில் ஈடுபட்ட ரோபின் உத்தப்பா, ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 23 இலட்சத்து 36 ஆயிரம் ரூபாயை செலுத்தவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

முறைப்பாட்டின் பேரில் உத்தப்பாவுக்கு எதிராக கடந்த 04 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர் டுபாயில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், எதிர்வரும் 27 ஆம் திகதிக்குள் மோசடி செய்த பணத்தை முழுமையாக செலுத்த கெடு விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Image

Related

Tags: Arrest warrantRobin Uthappaபிடியாணைரோபின் உத்தப்பா
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஹசீனா ஆட்சியில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட நிகழ்வுகளில் இந்தியா தொடர்பு- வெளியான அதிர்ச்சி அறிக்கை!

Next Post

நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

Related Posts

டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!
கிரிக்கெட்

டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!
கிரிக்கெட்

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29
பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?
கிரிக்கெட்

பங்களாதேஷை பழிவாங்குகிறதா ICC?

2026-01-28
புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது
கிரிக்கெட்

புதிய ஒருநாள் அணிகளுக்கான தரவரிசையில் இலங்கை 6ஆவது இடத்தைப் பெற்றுள்ளது

2026-01-28
தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!
கிரிக்கெட்

தம்புள்ளை தண்டர்ஸ் அணி உரிமையாளருக்கு 24 மில்லியன் ரூபா அபராதம்!

2026-01-28
460,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு ஏலம் போன டோன் பிராட்மேனின் பேக்கி தொப்பி!
கிரிக்கெட்

460,000 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு ஏலம் போன டோன் பிராட்மேனின் பேக்கி தொப்பி!

2026-01-28
Next Post
நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

நோர்வே தூதுவருடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு!

தாமரைக் கோபுர திறப்பு நேரத்தில் மாற்றம்!

தாமரைக் கோபுர திறப்பு நேரத்தில் மாற்றம்!

டெல்லி பாடசாலைகளுக்கான வெடிகுண்டு மிரட்டல்; விசாரணையில் அதிர்ச்சி!

டெல்லி பாடசாலைகளுக்கான வெடிகுண்டு மிரட்டல்; விசாரணையில் அதிர்ச்சி!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29

அஸ்வெசும குறித்து 2026 ஆம் ஆண்டு மீளாய்வு!

2025-11-07
வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!

கூகுள் நிறுவனத்தின் வேமோ (Waymo) தன்னாட்சி வாகனங்கள் இனி லண்டனிலும் !

0
யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

0
டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!

டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!

0
ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!

0
இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பாரிய சவால்!

இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பாரிய சவால்!

0
வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!

கூகுள் நிறுவனத்தின் வேமோ (Waymo) தன்னாட்சி வாகனங்கள் இனி லண்டனிலும் !

2026-01-29
யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

2026-01-29
டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!

டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!

2026-01-29
ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!

2026-01-29
இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பாரிய சவால்!

இங்கிலாந்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதில் பாரிய சவால்!

2026-01-29

Recent News

வேல்ஸில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள 182-நாள் தங்கும் விதிமுறையால் சுற்றுலாத்துறையில் பெரும் நெருக்கடி!

கூகுள் நிறுவனத்தின் வேமோ (Waymo) தன்னாட்சி வாகனங்கள் இனி லண்டனிலும் !

2026-01-29
யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

யாழ். இந்துவில் நடைபெற்ற வடக்கு மாகாண கால்கோள் விழா!

2026-01-29
டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!

டி:20 உலகக் கிண்ண பயிற்சி போட்டிகள் விபரம்!

2026-01-29
ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!

ஆறு மாத குழந்தையை கொன்ற கீரன் ஹம்ப்ரிஸ் என்பவருக்கு 21 ஆண்டுகள் சிறை தண்டனை!

2026-01-29
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.