• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
வருடாந்த தேசிய புத்தரிசி விழா! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்!

வருடாந்த தேசிய புத்தரிசி விழா! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்!

Rahul by Rahul
2025/04/04
in இலங்கை, கொழும்பு, முக்கிய செய்திகள்
68 1
A A
0
30
SHARES
987
VIEWS
Share on FacebookShare on Twitter

சம்பிரதாயபூர்வமாக வருடாந்த பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியை கொண்டு ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யும் தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதியவிற்கு அருகாமையில் நடைபெற்றதுள்ளது.

அடமஸ்தானாதிபதி வண பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரின் அறிவுரைக்கமைய, “உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு பிடியளவு கமநிலத்திற்கு” என்ற தொனிப்பொருளின் கீழ் விவசாய அமைச்சு மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களம் என்பன இணைந்து 58 ஆவது தேசிய புத்தரிசி விழாவை ஏற்பாடு செய்திருந்தன.

blank

மன்னர் காலத்திலிருந்தே நடைபெற்று வரும் இந்த பண்பாட்டு நிகழ்வில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர் “நேரத்திற்கு மழை பொழிய வேண்டும் – விளைநிலங்கள் செழுமையாக வேண்டும்” என்றும், விவசாயத்தினால் நாடு தன்னிறைவடைந்து நாட்டின் பொருளாதாரம் செழிக்க வேண்டும் என்றும், தேசத்திற்கு நலன் வேண்டியும் சம்பிரதாய முறையில் பிரார்த்தனைகள் செய்யப்பட்டன.

தேசிய புத்தரிசி விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதலில் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

அநுராதபுரம் சிங்கத்தூணின் அருகிலிருந்து வருகைதந்த புத்தரிசி ஊர்வலம் ஜய ஸ்ரீ மஹா போதியை அடைந்தவுடன் சம்பிரதாயங்களுக்கு அமைவாக புத்தரிசி விழா ஆரம்பமானது.

blank

அடமஸ்தானாதிபதி வண பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர், தங்கப் பாத்திரத்தில் புதிய அரிசியை நிரப்ப ஆரம்பித்ததை தொடர்ந்து அனைத்து மாகாணங்களிருந்தும் கொண்டு வரப்பட்ட அரிசியால் தங்கப் பாத்திரம் நிரப்பப்பட்டது.

மஹா சங்கத்தினரின் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் தங்கப் பாத்திரத்தில் அரிசியை நிரப்பும் நிகழ்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் கலந்துகொண்டார்.

சம்பிரதாயபூர்வமாக ஜய ஸ்ரீ மஹாபோதியவிற்கு பூஜை செய்யவதற்கான தூய தேன் பானை இதன்போது ஊருவரிகே வன்னில எத்தோவினால் ஜனாதிபதியிடம் வழங்கிவைக்கப்பட்டது.

ஜய ஸ்ரீ மஹா போதியவிற்கு நெய் பூஜை செய்வதற்காக சப்ரகமுவ வரலாற்று சிறப்புமிக்க சமன் தேவாலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய் பானையும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.

blank

58 ஆவது தேசிய புத்தரிசி விழாவின் நினைவுப் பதிப்பும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், நாட்டின் விவசாய அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்த விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கான நினைவுப் பரிசுகள் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன் விஷமில்லா விளைச்சலைப் பெறுவதற்காக மாகாண மட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் பகிர்ந்தளிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

பின்னர் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, திக்கற்றுச் சென்ற பொருளாதாரத்தையே தற்போதைய அரசாங்கம் மாற்றிக்கொண்டிருப்பதாகவும், நெல் களஞ்சியங்கள் அழிவடைய இடமளித்து, நெல் சந்தைப்படுத்தல் சபை சுமார் 2,800 கோடி ரூபா கடன் சுமையை கொண்டிருப்பதாகவும், அந்த சரிவுகளில் இருந்து மீட்டெடுத்து மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்புச் செய்யும் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

blank

அதன்போது இந்நாட்டின் விவசாயத்துறைக்கு அமைவான அரச பொறிமுறையை போலவே ஒட்டுமொத்த விவசாய சமூகத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும், நாட்டின் கலாச்சார ஒழுக்கக் கட்டமைப்பையும் இணைத்துக்கொண்டு, தேசிய போருளாதாரத்தினை பலப்படுத்த மீண்டும் விவசாய பொருளாதார பாரம்பரியத்தை பயன்படுத்திக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

எனவே, நீர்ப்பாசன கட்டமைப்பை மீண்டும் புனர்நிர்மானம் செய்வதற்கு இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் 02 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டின் விவசாயத்தை மேம்படுத்துவதற்காக வடமத்திய மகா எல திட்டத்தில் மறுசீரமைப்பு பணிகள்
தொடங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், மரபணு உரிமைகளைப் பாதுகாத்து விதைகளில் தன்னிறைவு பெற்ற நாட்டை உருவாக்க விதைப் பண்ணைகளை உருவாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதில் ருவன்வெலிசாய சைத்தியாராம விகாராதிபதி ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் வண. ஈத்தலவெடுனுவெவே ஞானதிலக தேரர்,லங்காராமாதிபதி வண ரலபனாவே தம்மஜோதி தேரர் தலைமையிலான மகாசங்கத்தினர், விவசாய, கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார விமலசிறி, விவசாயம் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் விவசாய அமைப்புக்களின் தலைவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

Related

Tags: lkaNational Buddha Rishi FestivalnewsPresidentupdats
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

பிரபல பொலிவூட் நடிகர் மனோஜ் குமார் காலமானார்!

Next Post

மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் முதலாவது விமானம்!

Related Posts

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!
இலங்கை

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

2026-06-26
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்
இலங்கை

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

2026-06-26
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!
இலங்கை

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

2026-06-26
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!
இலங்கை

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

2026-06-26
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு
இலங்கை

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

2026-06-26
ஐ.நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக1,132 பேர் கொண்ட படையினர் குழு
இலங்கை

ஐ.நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பணிகளுக்காக1,132 பேர் கொண்ட படையினர் குழு

2026-06-26
Next Post
விலைமனு கோரும் நடவடிக்கை இடைநிறுத்தம்!

மனிதாபிமான உதவிகளை ஏற்றிச் செல்லும் முதலாவது விமானம்!

பொது வாக்கெடுப்பு நடத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-விஜய்!

பொது வாக்கெடுப்பு நடத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்-விஜய்!

இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

0
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

0
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

0
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

0
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

0
போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

2026-06-26
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

2026-06-26
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

2026-06-26
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

2026-06-26
மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

மட்டக்களப்பில் முதன் முறையாக உலகளாவிய திருக்குறள் மாநாடு

2026-06-26

Recent News

போதைப்பொருள் சந்தேக நபர்களை விடுவித்த சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் குறித்து விசாரணை!

நாடு தழுவிய ரீதியில் அதிரடி வேட்டை! தேசிய செயற்திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது!

2026-06-26
சாரா ஜாஸ்மின் இறந்திருக்க வாய்ப்பில்லை: பொது பாதுகாப்பு அமைச்சர்

போதைப்பொருளுக்கு இடமில்லை – முக்கிய அறிவிப்பு

2026-06-26
சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

சுற்றுச்சூழல் பிரச்சினை? உடனே புகார் செய்ய புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்!

2026-06-26
பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

பெண் உடலியல் சிகிச்சை நிபுணர் மரண வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

2026-06-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.