இங்கிலாந்தில் ஒரு கடுமையான பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாகவும் இது புயல் கிளாடியாவுக்குப் பின்னர் வரக்கூடும் என்றும் இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, அடுத்த வார ஆரம்பத்தில் பகல்நேர வெப்பநிலை சமீபத்தியதை விட தெற்குப் பகுதிகளில் 10°C குறைவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வானிலை அலுவலகத்தின் கணிப்பின்படி, வெப்பநிலை -7°C ஆகக் குறையக்கூடும், மேலும் நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க பனிப்பொழிவுக்கான வாய்ப்பும் உள்ளது.
வடமேற்கில் உள்ள உயர் அழுத்தம் “ஆர்க்டிக்கிலிருந்து வடக்கு நோக்கி குளிர்ந்த நீரோட்டத்தை வீசுவதே இந்த விரைவான குளிர்ந்த வானிலைக்குக் காரணம் என்று வானிலை ஆய்வு மையத்தின் துணைத் தலைமை வானிலை ஆய்வாளர் (Dan Holleய) டான் ஹோலி, தெரிவித்துள்ளார்.
இதனால் பரவலான உறைபனிகள் மற்றும் பகல்நேர வெப்பநிலை ஒற்றை இலக்கங்களில் இருக்கும்.
அடுத்த வாரம் சில இடங்களில் வெப்பநிலை -7C வரை குறைவடிவத்துடன் இந்த திடீர் குளிர்ச்சி தெற்கு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பெரும் மழை மற்றும் வெள்ளத்தின பின்னர் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.














