வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகள், வடக்கு மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், பதுளை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாகப் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
காற்று:
காற்று வடகிழக்கு திசையிலிருந்து வீசும், காற்றின் வேகம் மணிக்கு (30-40) கி.மீ. வரை இருக்கும்.
கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக முல்லைத்தீவு வரையிலும், மாத்தறையிலிருந்து முல்லைத்தீவு வழியாக ஹம்பாந்தோட்டை வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு (45-50) கி.மீ. வரை அதிகரிக்கலாம்.
கடல் நிலை:
கொழும்பிலிருந்து புத்தளம் வழியாக முல்லைத்தீவு வரையிலும், மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்புகளில் சில நேரங்களில் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும். தீவைச் சுற்றியுள்ள பிற கடற்பரப்புகள் மிதமானதாக இருக்கும்.














