நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து சந்தேக நபர்களை ஜனவரி 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதிவான் நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அவரது மகன் ஜோஹன் பெர்னாண்டோ, இளைய மகன் ஜெரோம் கென்னத் பெர்னாண்டோ மற்றும் இருவர் சதோச வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்டனர்.
லங்கா சதோசாவுக்குச் சொந்தமான லொறி உட்பட அரச சொத்துக்களை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
இது அரசுக்கு கணிசமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.















