சீனாவில் கட்டுமானத்தில் இருந்த ரயில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 05 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜியாங்சுவில் உள்ள யான்செங்கில் நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
மீட்புக் குழுக்களின் தொடர் முயற்சியின் பயனாக 03 பேரின் சடலங்கள் இன்று காலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற உடனேயே அவசர சேவைகள் அனுப்பப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
















