மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக மஹோற்சவ திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
26 நாட்களைக் கொண்ட மாசிமக மஹோற்சவ திருவிழாவில் மார்ச் 1ம் திகதி கற்பூர சட்டி ஊர்வலமும், பறவைக்காவடி ஊர்வலமும், தீமிதிப்பும் நடைபெறுவதுடன் மார்ச் மாதம் 2ம் திகதி பஞ்சரத பவனியும், மார்ச் மாதம் 4ம் திகதி கொடியிறக்கமும், மார்ச் மாதம் 05ம் திகதி மாலை பூங்காவனமும் நடைபெறவுள்ளது.
இதேவேளை திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது என மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான அறங்காவல் சபை தலைவர் விக்னேஸ்வரன் சர்வானந்தா ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.













