ஹொங்கொங்கின் பிரபல ஊடகப் பிரமுகர் ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 05 ஆண்டுகள் நீடித்தன.
‘வெளிநாட்டு சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவித்தல்’ மற்றும் ‘கிளர்ச்சியைத் தூண்டும் வகையில் செய்திகளை வெளியிடுதல்’ ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டன.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவருடன் பணியாற்றிய மேலும் 6 ஊழியர்களுக்கும் 6 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று (09) வாசிக்கப்பட்டு ஜிம்மி லாய்க்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஜிம்மி லாய்க்கு 78 வயதில் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதால்இ அவர் தனது 90-களின் இறுதியில்தான் விடுதலையாக முடியும். இது நடைமுறையில் அவருக்கு விதிக்கப்பட்ட ‘ஆயுள் தண்டனை’ போன்றது என மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.














