• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

Hanushya P by Hanushya P
2026/02/11
in இலங்கை, மலையகம்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சாமிமலை, கவரவில தோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், இன்று (11) காலை மயங்கி விழுந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோட்ட நிர்வாகத்தால் 8 தொழிலாளர்களின் சேவை இடைநிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்துள்ளது.

குறித்த தோட்டத்தில் பணியாற்றும் 8 தொழிலாளர்களின் சேவையைத் தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தியிருந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கடந்த 7 நாட்களாகத் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தமது கோரிக்கைகளுக்கு உரியத் தீர்வு கிடைக்காத காரணத்தினால், நேற்றைய தினம் (10) முதல் இவர்கள் தமது போராட்டத்தை உண்ணாவிரதப் போராட்டமாக மாற்றினர்.

இந்நிலையில், உண்ணாவிரதத்தின் தாக்கம் காரணமாக இன்று காலை மூன்று தொழிலாளர்கள் திடீரென மயக்கமடைந்தனர்.

இதனையடுத்து, அவர்கள் உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலம் கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தோட்டத்தில் பதிவு செய்யப்படாத வெளியாட்களைப் பயன்படுத்தித் தேயிலை பறிக்கும் பணிகளை மேற்கொள்ளத் தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்குத் தோட்டத் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். நிர்வாகத்தின் இந்தத் தீர்மானத்தை எதிர்த்த காரணத்தினாலேயே, 8 தொழிலாளர்களின் சேவையும் தன்னிச்சையாக இடைநிறுத்தப்பட்டதாகத் தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த 48 நாட்களாகத் தங்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் தாம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப்பிரச்சினை தொடர்பில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதனையடுத்து, குறித்த 8 தொழிலாளர்களையும் மீண்டும் பணிக்குத் திரும்புமாறு தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இருப்பினும், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட கடந்த 48 நாட்களுக்கான நிலுவைச் சம்பளம் அல்லது அதற்கான உரிய நஷ்டஈடு தொடர்பில் நிர்வாகம் எவ்வித உறுதியான தீர்வுகளையும் வழங்கவில்லை எனத் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

“எங்களை மீண்டும் வேலையில் சேர்த்தால் மட்டும் போதாது, அநியாயமாகப் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட நாட்களுக்கான உரியத் தீர்வு வேண்டும்” என வலியுறுத்தித் தொழிலாளர்கள் தமது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

Related

Tags: 8 workers by the estate managementhas now intensified.Kawarawila Estate in SamimalaiMaskeliya Police Division
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாணவர் சங்கம் ரிஃபார்ம் யுகே (Reform UK) கட்சிக்கு தடை: ‘இனவெறி மற்றும் வெறுப்புணர்வவே ‘ காரணம்!

Next Post

மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர் யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!

Related Posts

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!
இலங்கை

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!
இலங்கை

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்
யாழ்ப்பாணம்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14
பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை
இலங்கை

பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

2026-03-14
கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்
இலங்கை

கடும் வெப்பமான வானிலை எதிர்வரும் மே மாதம் 25 ஆம் திகதி வரை நீடிக்கக்கூடும்

2026-03-14
காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!
இலங்கை

காத்தான்குடி கடற்கரையில் கரையொதுங்கிய மர்மப் பொருள்!

2026-03-14
Next Post
மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர்  யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!

மான்செஸ்டர் (Manchester ) யூத வழிபாட்டுத் தலத் தாக்குதலுக்குப் பின்னர் யூத எதிர்ப்புச் சம்பவங்கள் அதிகரிப்பு!

பிரித்தானியப் பிரதமரின் முன்னாள் உதவியாளர் தொழிற்கட்சியிலிருந்து இடைநீக்கம் !

பிரித்தானியப் பிரதமரின் முன்னாள் உதவியாளர் தொழிற்கட்சியிலிருந்து இடைநீக்கம் !

10 இலட்சத்திற்கும் அதிகமானோரின் பார்வையை ஈர்த்த  தேவ்னிமோரி கண்காட்சி!

10 இலட்சத்திற்கும் அதிகமானோரின் பார்வையை ஈர்த்த தேவ்னிமோரி கண்காட்சி!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

2026-03-11
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

0
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

0
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

0
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

0
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

0
ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

யாழ். பல்கலையில் மூன்று பேர் பேராசிரியர்களாகப் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்

2026-03-14

Recent News

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

ஜனாதிபதி அலுவலகத்தில் ஜப்பானிய உயர்மட்டக் குழு!

2026-03-14
ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

ஈரானில் நிலைகுலைந்த 3.2 மில்லியன் மக்களின் வாழ்க்கை!

2026-03-14
AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

AI-க்காக 16,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் மெட்டா?

2026-03-14
முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

முன்பள்ளி மாணவர்களின் இணையவழி வகுப்புகளுக்குத் தடை!

2026-03-14
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.