சுற்றுலா, உற்பத்தி மற்றும் வேளாண் துறைகளில் மூலோபாய மேம்பாட்டுத் திட்டங்களில் முதலீடுகளுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச் சலுகைகளை வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவின் கீழ், 50 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் 300 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான முதலீடுகளுக்கு வரிச் சலுகைகள் பொருந்தும்.
தகுதியான திட்டங்கள் குறைந்தது 50 உள்ளூர் வேலைகளை உருவாக்க வேண்டும் என்று நிதி, பொருளாதார நிலைப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
தகுதிவாய்ந்த முதலீடுகளுக்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரையிலான நிறுவன வருமான வரி விலக்குகள் வழங்கப்படும்.
திட்டங்களுக்குத் தேவையான மூலதனப் பொருட்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் இறக்குமதிக்கும் வரிச் சலுகைகள் பொருந்தும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது.












