இன்று (17) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தத் தீர்மானம் காரணமாக இன்று நள்ளிரவு முதல் தொடருந்து சேவைகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தற்போது பணியில் உள்ள இராணுவத்தின் ஒரு குழுவினருக்கு தொடருந்துகளை இயக்குவது தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினருக்கு இவ்வாறான பயிற்சிகளை வழங்குவது தொழிற்சங்க விதிகளுக்கு முரணானது என தொடருந்து இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.















