ரஷ்யாவின் பினாமி கப்பல் ஒன்று பிரெஞ்சு கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, அதிர்ச்சி கொடுக்கப்பட்டுள்ளது.
கப்பலின் மாலுமி ஒரு சீன நாட்டவர் எனவும், அவர் இன்று Brest நகர நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. பிரிட்டனி கடலில் பயணித்துக்கொண்டிருந்த Boracay எனும் எண்ணைக் கப்பலை பிரெஞ்சு கடற்படையினர் தடுத்து நிறுத்தியிருந்தனர். ஆனால் அவர்களது கட்டுப்பாட்டை மீறி கப்பல் பயணிக்க, தடுத்து நிறுத்த அதிகாரிகள், கப்பலின் மாலுமி Chen Zhangjie கைது செய்யப்பட்டதோடு, கப்பல் நங்கூரமிடப்பட்டது.
கைது செய்யப்பட்ட மாலுமிக்கு ஓராண்டு சிறையும் 150,000€ யூரோக்கள் குற்றப்பணமும் அறவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
குறித்த கப்பல், ரஷ்யாவின் பினாமி கப்பல் எனவும், ரகசியமாக எண்ணை விற்பனையில் ரஷ்யா ஈடுபட்டு வருவதாகவும், போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள ரஷ்யாவிக்கு பிரெஞ்சு கடற்பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.















