இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் உள்ள தகவல்களைப் பகிரும் முன்னர், அவற்றின் உண்மைத்தன்மையைக் கண்டறியும் பொறுப்பு ஒவ்வொரு பிரஜைக்கும் காணப்படுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்
சந்தேஷய ஊடக விருது வழங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இதனை குறிப்பிட்டார்
தகவல் தொழில்நுட்பத்தாலும் ஊடகங்களாலும் மாற்றமடைந்த ஒரு உலகில் வாழ்வதற்கு எமது எதிர்கால சந்ததியினரை நாம் தயார்படுத்த வேண்டும். கடந்த காலங்களில், அறிவு மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் உரிமை ஒரு குறிப்பிட்ட சலுகை பெற்ற அல்லது அதிகாரம் கொண்ட குழுக்களிடமே இருந்தது. எத்தகைய தகவல்கள் பரிமாறப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி ஒரு சிறிய குழுவிடமே காணப்பட்டது.
ஆனால், இன்று தொழில்நுட்பப் புரட்சியின் விளைவாகத் தரவுகளும் அறிவும் நம் அனைவருக்கும் எட்டக்கூடிய ஒன்றாக மாறியுள்ளன. இது ஒரு வகையில் வரவேற்கத்தக்க விடயமாகும்.ஊடகவியலில் இருக்க வேண்டிய பொறுப்புக்கூறல் மற்றும் நம்பகத்தன்மை தொடர்பில் இன்று பெரும் பிரச்சினைகளையும் பாரிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
உண்மை எதுவென்று கண்டறிய முடியாத அளவிற்குத் தகவல்கள் இன்று எம்மை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கின்றன. இதனால் சில நேரங்களில் முடிவுகளை எடுப்பது மிகவும் கடினமாகிறது. சமூகத்தின் இருப்புக்கும் பிரஜைகளுக்கு இடையிலான நல்லுறவுக்கும் மக்களின் வாழ்க்கையில் செல்வாக்கு செலுத்தும் நிறுவனங்கள் மீதான நம்பகத்தன்மையைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானதாகும்.
அதன் மூலமே ஒரு சமூகத்தின் ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு மற்றும் இருப்பை உறுதி செய்ய முடியும்.இணையத்தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் உள்ள தகவல்களைப் பிறருக்குப் பகிரும் முன்னர், அவற்றின் உண்மைத்தன்மையைக் கண்டறியும் பொறுப்பு ஒவ்வொரு பிரஜைக்கும் உள்ளது,












