தென்மேற்கு டெல்லியில் அமைந்துள்ள பாலம் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ஸ்ரீ ராம் சௌக் அருகே இருந்த பல அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிடத்தில் இன்று (18) காலை தீ விபத்து ஏற்ப்பட்டது.
இந்த தீ விபத்தில் மூன்று சிறுவர்கள் உட்பட ஏழு பேர் உயிரிழந்ததுடன், பலர் பலத்த காயமடைந்தனர் என்று டெல்லி பொலிஸாரும், டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.
தீயை அணைக்கவும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் சுமார் 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அனுப்பப்பட்டன.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிறைவடைந்த பின்னரே சேத விபரங்கள் தொடர்பான உண்மையான நிலைமை தெரியவரும் என்று டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட அறிக்கைகளின்படி, கட்டித்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள அழகுசாதனப் பொருட்கள் வர்த்தக நிலையத்தில் ஏற்பட்ட மின்கசிவு பெரும் தீவிபத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
எவ்வாறெனினும், தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் தீ விபத்து தொடர்பான விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


















