மத்திய மலைநாட்டில் தற்போது கடுமையான வெப்பம் நிலவுவதால் நீரேந்தும் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.

குறிப்பாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் மற்றும் சென் கிளயார் நீர்வீழ்ச்சியின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
தொடர்ந்து இந்தப்பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவுவதால் சகல நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் மேலும் குறையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன்காரணமாக பெருந்தோட்ட பகுதிகளில் சுத்தமான குடிநீருக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு நிலவி வருகிறது மேலும் விவசாய நடவடிக்கைகளுக்கு நீரைப் பெறுவதில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.














