உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், மொஸ்கோவில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் ஜோன்ஸ் ஜெரார்டஸை ரஷ்யா வெளியேற்றியுள்ளதாக, ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை (FSB) திங்களன்று அறிவித்தது.
ஜெரார்டஸின் அங்கீகாரம் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் இரண்டு வாரங்களுக்குள் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ரஷ்ய கூட்டாட்சி பாதுகாப்பு சேவை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவர், ரஷ்யக் கூட்டமைப்பின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் உளவு மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டதாகவும் அந்த அறிக்கை மேலும் கூறியுள்ளது.
குறிப்பாக, முறைசாரா சந்திப்புகளின் போது ரஷ்யப் பொருளாதாரம் குறித்த முக்கியத் தகவல்களைப் பெற அந்தத் தூதர் முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.













