2026.04.27 அன்று பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மெகசின் சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக ஒரு கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விரைவு விசாரணைகளின் முன்னேற்றமாக, இதற்கு முன்னர் சிறைச்சாலை ஜெய்லரும் ஒருவரும் சிறைக் காவலர் ஒருவரும் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
மேலதிக விசாரணைகளின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், இம் மோதலுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஒரு சிறைக் காவலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தில் காயமடைந்து சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தவர், கொழும்பு 14 நவகம்புர பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய சிறைக் கைதி ஆவார். அவர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து பொலிஸ்மா அதிபரின் உத்தரவின் பேரில், கொழும்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஷாந்த சொய்சா அவர்களின் மேற்பார்வையில் பொரளை பொலிஸார், கொழும்பு பிராந்திய குற்றப்பிரிவு மற்றும் கொழும்பு தெற்கு குற்ற விசாரணைப் பிரிவு ஆகியவை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.















