இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர அங்கீகாரம் ஏப்ரல் மாதம் முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வருகிறது.
இது இத்தாலியில் வசிக்கும் இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சாரதி அனுமதிப்பத்திர பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை வழங்கும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சு மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு ஆகியவற்றின் தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிக்குப் பின்னர் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்து தொழில்நுட்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளது என்றும் அமைச்சர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டார்.
புதிய ஏற்பாட்டின் கீழ், இத்தாலியில் ஆறு ஆண்டுகளாக வசித்துவரும் இலங்கையர்கள், எழுத்து அல்லது நடைமுறைப் பரீட்சைகளில் பங்கேற்காமல், தங்களது தேசிய சாரதி அனுமதிப் பத்திரத்தை இத்தாலிய உரிமமாக மாற்றிக்கொள்ளத் தகுதி பெறுவார்கள்.
இத்தாலியில் உள்ள பெருமளவிலான இலங்கை வெளிநாட்டவர் சமூகத்தினரால் இந்த வசதி அன்புடன் வரவேற்கப்பட்டுள்ளதாகவும், இது வேலைவாய்ப்புகளை கணிசமாக மேம்படுத்தி, ஒரு ஆக்கப்பூர்வமான புலம்பெயர் சமூகமாக அவர்களின் பங்களிப்பை வலுப்படுத்தும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

















